economics

img

ஜி.எஸ்.டி வரி வசூல் 12.5 சதவீதம் உயர்வு - ஒன்றிய நிதியமைச்சகம் அறிவிப்பு

ஜிஎஸ்டி வசூல் 12.5 சதவீதம் அதிகரித்து ரூ.1.68 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

நடப்பு நிதியாண்டில் மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.18.40 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தின் வசூலை விட 11.7 சதவீதம் அதிகமாகும். நடப்பு நிதியாண்டின் சராசரி மாத மொத்த வசூல் ரூ.1.67 லட்சம் கோடியாக இருந்தது, கடந்த நிதியாண்டில் ரூ.1.5 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. பிப்ரவரி 2024 இல் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1,68,337 லட்சம் கோடியாக உள்ளது. இது 2023 ஆம் ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது வலுவான 12.5 சதவீதம் அதிகரித்துள்ளது என்று ஒன்றிய அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 2024 இல் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1.68 லட்சம் கோடியாக உள்ளது. இது 2023 ஆம் ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது வலுவான 12.5 சதவீதம் அதிகரித்துள்ளது" என்று அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உள்நாட்டுப் பரிவர்த்தனைகளிலிருந்து ஜிஎஸ்டியில் 13.9 சதவீதம் அதிகரிப்பு மற்றும் பொருட்களின் இறக்குமதியிலிருந்து ஜிஎஸ்டியில் 8.5 சதவீதம் அதிகரித்ததன் மூலம் இந்த வளர்ச்சி உந்தப்பட்டது.

 

;